உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முள்ளுவாடி கேட்டில் ஆண் சடலம் மீட்பு

முள்ளுவாடி கேட்டில் ஆண் சடலம் மீட்பு

சேலம்: சேலம், முள்ளுவாடி கேட் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று காலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அஸ்தம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், மணக்காடு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இளையராஜா, 45, என தெரிந்தது. அவருக்கு திருமணமாகி, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளதும், சில நாட்களாக இளையராஜா மனநலம் பாதிக்கப்பட்டு, வீட்டுக்கு செல்லாமல் ஆங்காங்கே சுற்றி வந்ததும் தெரிந்தது. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்திருக்கலாம் என கருதி போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ