மேலும் செய்திகள்
விவசாய கிணற்றில் தொழிலாளி சடலம் மீட்பு
28-Aug-2025
இடைப்பாடி: சொத்து அபகரிக்கும் நோக்கில், சித்தப்பாவை கொலை செய்த அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே முண்டாச்சியூர் காட்டுவளவை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 47. திருமணமாகாத இவர், கூடை பின்னும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம், முப்பனுார் அருகே கள்ளுக்கடையில் உள்ள சுரேந்தர் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தார். பூலாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். போலீசார் கூறியதாவது: ராமச்சந்தின், அவரது அண்ணன் ராஜமாணிக்கத்துக்கு, தலா ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ராஜமாணிக்கம் இறந்துவிட்டதால் அவரது மகன் பிரகாஷ், 34, அவற்றை வேறு ஒருவருக்கு விற்றார். சித்தப்பா ராமச்சந்திரனின் நிலத்தை குத்தகை எடுத்து பிரகாஷ் விவசாயம் செய்து வந்தார். ராமச்சந்திரனுக்கு திருமணமாகாததால் அவரது நி லத்தை, சகோதரிகள் இருவருக்கு பாதி கொடுத்துவிட்டு, மீதியை விற்று பணத்தை வைத்து கொள்வதாக கூறி வந்தார். இதனால் சித்தப்பா சொத்தை அபகரிக்க பிரகாஷ் திட்டமிட்டார். கடந்த, 26ல் ராமச்சந்திரனை, கள்ளுக்கடைக்கு அழைத்துச்சென்று இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார். பின், உடலை கிணற்றில் துாக்கிபோட்டு அவர் தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடி உள்ளார். பிரகாஷை கைது செய்துள்ளோம். இவ்வாறு கூறினர்.
28-Aug-2025