ஏ.டி.எம்., மையத்தில் பேட்டரி திருடியவர் சிக்கினார்
சேலம்: சேலம், தாதுபாய்குட்டையில், தனியார் வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. அங்கு கடந்த, 8ல், இயந்திரத்தில் இருந்து, 3 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். தனியார் வங்கி மேலாளர் பத்மநாபன் புகார்படி, டவுன் போலீசார் விசாரித்ததில், ஆத்துார், பழனியாபுரம் தெற்கு வீதியை சேர்ந்த சதீஷ்குமார், 37, திருடியது தெரிந்தது. நேற்று, அவரை கைது செய்த போலீசார், பேட்டரிகளை மீட்டனர்.