சாக்கடையில் விழுந்தவர் பலி
ஆத்துார்: ஆத்துார் அரசு மருத்துவமனை முன்புறம் உள்ள சாக்கடையில், கடந்த டிச., 27 மாலை, 55 வயது மதிக்கத்தக்க முதியவர் தவறி விழுந்தார். படுகாயமடைந்த அவரை, மக்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மறுநாள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். ஆத்துார் டவுன் வி.ஏ.ஓ., பொன்னுசாமி புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.