மாரியம்மன் கோவில்திருவிழா தொடக்கம்
பனமரத்துப்பட்டி:மல்லுார் மகா சக்தி மாரியம்மன் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு கம்பம் நடுதல், அம்மனுக்கு அபி ேஷகம், அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, 15 நாட்களுக்கு தினமும் இரவில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. வரும், 30ல் பொங்கல் வைத்தல், மே, 1ல் வண்டி வேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.