நோயாளிகளிடம் கனிவாக நடந்துகொள்ள மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுரை
சேலம்: சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று ஆய்வு செய்தார். மருந்தாளுனர்க-ளிடம் போதிய மருந்துகள் இருப்பு உள்ளதா, நோயாளிகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா எனகேட்டறிந்தார்.அப்போது கழிப்பறைக்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால் அவை பூட்டப்பட்டிருப்பதாக, நோயாளிகள் குற்றம்சாட்டினர். உடனே நடவடிக்கை எடுக்க, டீன் தேவி மீனாளிடம் அறிவுறுத்-தினார். தொடர்ந்து துறை மருத்துவர்களை அழைத்து, என்-னென்ன வசதிகள் தேவைப்படுகிறது என கேட்டறிந்தார். இதையடுத்து அமைச்சர் கூறுகையில், ''நோயாளிகளிடம் கனி-வாக நடந்துகொள்ளும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்-டுள்ளது. பழுதான மின்துாக்கிகளை சரிசெய்ய நடவடிக்கை மேற்-கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார். கலெக்டர் பிருந்தாதேவி உடனி-ருந்தார்.மருத்துவர் தேவைஇதனிடையே, அனைத்து அரசு மருத்துவர் சங்க கூட்டமைப்பு சார்பில், அமைச்சரிடம் மனு வழங்கப்பட்டது. அதில், 'அம்மா-பேட்டையில் உள்ள புறநகர் மருத்துவமனைக்கு போதிய மருத்து-வர்கள், செவிலியர்கள், ஆண், பெண் செவிலிய உதவியாளர்-களை நியமிக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்பாட்டுக்கு, 'டாக்டர் கேன்டீன்' அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.