உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபைல் வழிப்பறி செய்தவர் சிக்கினார்

மொபைல் வழிப்பறி செய்தவர் சிக்கினார்

சேலம்:சேலம், உடையாப்பட்டி அருகே அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்த லோகநாதன் மகன் யுவராஜ், 26. இவர் நேற்று காலை, 8:00 மணியளவில், 4 ரோடு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒருவர், திடீரென யுவராஜ் பாக்கெட்டில் இருந்த உயர்ரக மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். மொபைலை பறி கொடுத்தவர் கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் விரட்டிசென்று அவரை பிடித்தனர். பிறகு, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு நடந்த விசாரணையில், சேலம் கோட்டை அண்ணாநகரை சேர்ந்த அயூப்கார்த்திக், 55, என்பது தெரிந்தது. அவர் பறித்த மொபைலை மீட்டு, கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ