மின் ஒயரில் சிக்கி குரங்கு பலி
மகுடஞ்சாவடி: சேலம் அருகே சித்தர்கோவில் அடிவாரப்பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. நேற்று காலை, 10:20 மணிக்கு, மன்னாதகவுண்டனுார் செல்லும் சாலையோரம் உள்ள மின்கம்பியில் சிக்கி ஒரு குரங்கு குட்டி உயிரிழந்தது. மின்துறையினர், இறந்த குரங்கை மீட்டு, மக்கள் உதவியுடன் அடக்கம் செய்தனர். குரங்குகள் இறப்பதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.