உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகை பறித்த வழக்கு மேலும் ஒருவர் கைது

நகை பறித்த வழக்கு மேலும் ஒருவர் கைது

நகை பறித்த வழக்குமேலும் ஒருவர் கைதுசேலம், செப். 20-சேலம், மல்லமூப்பம்பட்டியை சேர்ந்தவர் பத்மாவதி. அரசு பள்ளி ஆசிரியையான இவர், சூரமங்கலத்தில் உள்ள வங்கிக்கு கடந்த ஆக., 15ல் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த, 3 பேர், பத்மாவதி அணிந்திருந்த, 12 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றனர். அவர் புகார்படி சூரமங்கலம் போலீசார் விசாரித்து விழுப்புரத்தை சேர்ந்த செந்திலை கைது செய்தனர். தொடர்ந்து அவரது தகவல்படி, திருவாரூரில் பதுங்கி இருந்த, மதனேஸ்வரன், 35, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொருவரை, போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !