ஊராட்சி அலுவலகம் திறப்பு
ஆத்துார் அருகே தாண்டவராயபுரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட, 31.40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பணி நடந்து கட்டுமா-னப்பணி முடிந்தது. நேற்று, அந்த ஊராட்சி அலுவலகத்தை, ஆத்துார் ஒன்றிய குழு தலைவி பத்மினிபிரியதர்ஷினி திறந்து வைத்தார். ஊராட்சி தலைவர் லிசா, ஒன்றிய கவுன்சிலர் தனலட்-சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.மேலும் கூலமேட்டில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 31.60 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, ஊராட்சி அலுவலகத்தை, பத்மி-னிபிரியதர்ஷினி, நேற்றுமுன்தினம் திறந்து வைத்தார். ஊராட்சி தலைவர் வெள்ளையம்மாள், ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.