கால்நடை மருந்தகத்தில் 50 மரக்கன்று நடல்
தலைவாசல்: தலைவாசல் அரசு கால்நடை மருந்தக வளாகத்தில் ரோட்டரி கிளப் சார்பில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. கிளப் தலைவர் மயில்வாகனம் தலைமை வகித்தார். அதில் அரசு, வேம்பு, புங்கன் உள்பட, 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. கால்நடை உதவி இயக்குனர் முருகவேல், மருத்துவர் சக்திவேல், ரோட்டரி கிளப் துணை கவர்னர் ஆதிமூலம், ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் மணி உள்பட பலர் பங்கேற்றனர்.