அஞ்சல் ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, கிழக்கு கோட்ட தலைமை அஞ்சலகம் முன், அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கோட்ட தலைவர் நவீன்குமார் தலைமை வகித்தார். அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 8வது சம்பள குழுவை உடனே அமைக்க வேண்டும்; ஐ.டி.சி., திட்டத்தை கைவிடுதல்; கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு சிவில் அந்தஸ்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஓய்வூதியர் சங்கத்தலைவர் நேதாஜி உள்ளிட்ட நிர்வாகிகள், அகில இந்திய அஞ்சல் ஊழியர், தபால்காரர் மற்றும் பன்முக திறன் ஊழியர், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.