தரைப்பாலத்தால் அவதி மேம்பாலம் கட்ட கோரிக்கை
தரைப்பாலத்தால் அவதிமேம்பாலம் கட்ட கோரிக்கைபனமரத்துப்பட்டி, டிச. 1-பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி ஊராட்சி, ஜருகுமலை அடிவாரத்தில் உள்ளது. மழை காலங்களில் காட்டாற்று வெள்ளம், நிலவாரப்பட்டி ஓடை வழியே செல்கிறது. குறிப்பாக இருசாயி அம்மன் கோவில் சாலை, செல்லன் கரடு சாலையை, ஓடை கடந்து செல்கிறது. அங்கு தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல நேரங்களில் வெள்ளம், பாலத்தை மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க, இரு சாலைகளிலும் மேம்பாலம் அமைக்க, நிலவாரப்பட்டி மக்கள் வலியுறுத்தினர்.