உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை கடத்திய 2 பேருக்கு காப்பு

புகையிலை கடத்திய 2 பேருக்கு காப்பு

பனமரத்துப்பட்டி: பெங்களூருவில் இருந்து சேலம் வழியே, கர்நாடகா பதிவெண் கொண்ட, 'ஹூண்டாய்' கார், கடந்த, 18 இரவு, நாமக்கல் நோக்கி வேகமாக சென்றது. ரோந்து போலீசாரை பார்த்ததும், மல்லுார் அருகே அம்மாபாளையத்தில் காரை நிறுத்திவிட்டு, டிரைவர் ஓடிவிட்டார். காரை போலீசார் சோதனை செய்த போது, 354 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. மல்லுார் போலீசார் விசாரணையில் தஞ்சாவூரை சேர்ந்த கோவிந்சிங் ஹூர்சிங், 33, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேவராஜ்சிங், 28, புகையிலை பொருட்களை கடத்தியது தெரிந்தது. இருவரையும் நேற்று, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை