உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாலிபர் காதை வெட்டிய 3 பேருக்கு காப்பு

வாலிபர் காதை வெட்டிய 3 பேருக்கு காப்பு

சேலம், சேலம், அம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஹரிராம், 26. ரயில்வே லைன் வடக்கு தெருவில் உள்ள பொன் மாரியம்மன் திருவிழாவுக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு இரவு, 12:30 மணிக்கு, ஹரிராமிடம், 3 பேர் கத்தியை காட்டி பணம் கேட்டனர். அவர் தராததால், கத்தியால் ஹரிராமின் காதை வெட்டிவிட்டு, 3 பேரும் தப்பினர். அங்கிருந்தவர்கள், ஹரிராமை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்ததில், பாண்டியன் தெரு மாதவன், 23, சிவா, 24, விக்னேஷ், 24, ஆகியோர் என தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை