பேஸ்புக் மூலம் பழகி ரூ.1.50 லட்சம் மோசடி
சேலம்: 'பேஸ்புக்' மூலம் பழகி வங்கி யில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம், 1.52 லட்சம் ரூபாய் மோசடி செய்த சென்னை ஆசாமி மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.சேலம், மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ், 33; 'பேஸ்-புக்'கில் சென்னையை சேர்ந்த ஒருவர் நண்பரானார். அப்போது சதீஷ் 'வேலை தேடி வருகிறேன்' என கூறியுள்ளார். அதற்கு அவர், 'வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி வருகிறேன். மத்-திய ரிசர்வ் வங்கி அதிகாரியுடன் பழக்கம் உள்ளதால், ஏற்காட்டில் உள்ள ஒரு வங்கியில் வேலை வாங்கி தருகிறேன். அதற்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்' என கேட்டுள்ளார்.அதை நம்பிய சதீஷ், 'கூகுள்-பே' மூலம், 1.52 லட்சம் ரூபாயை அனுப்பினார். பணத்தை பெற்ற அவர், ஓராண்டாகியும் வேலை வாங்கி தரவில்லை. பின் சரிவர பதில் இல்லாததால் ஏமாற்றப்-பட்டதை உணர்ந்த சதீஷ், இரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார். பேஸ்புக் ஐ.டி., மூலம் நடத்திய விசாரணையில், சென்னை, திருமுல்லைவாயிலை சேர்ந்த சிவக்குமார் என தெரிந்-தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.