உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவர்கள் மீட்பு

வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவர்கள் மீட்பு

சேலம்:சேலம், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, இரு சிறுவர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்களிடம், ஏட்டு கீதா விசாரித்தபோது, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த, 8ம் வகுப்பு மாணவர்கள் என்பதும், டியூசன் செல்வதாக கூறிவிட்டு, சேலம் வந்ததும் தெரிந்தது. இதையடுத்து குமாரபாளையம் போலீசார் மூலம், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் பெற்றோர் வந்ததும், அவர்களிடம் சிறுவர்களை அழகாபுரம் போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி