செவிலியையிடம் சீண்டல் காவலாளி கை உடைப்பு
சேலம், நசேலம், புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிபவர் ராஜாகண்ணு, 67. இவர், கடந்த அக்., 30 மாலை, மருத்துவமனையில் இருந்தார். அப்போது, அங்கு வந்த, 4 பேர், அவரை மரக்கட்டையால் தாக்கி, அவரது கையை அடித்து உடைத்துச்சென்றனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரித்ததில், அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியை ஒருவரிடம், ராஜாகண்ணு சில்மிஷம் செய்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.