உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாகனம் மோதி காவலாளி பலி

வாகனம் மோதி காவலாளி பலி

சங்ககிரி, சங்ககிரி, நாட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி, 65. அம்மன் கோவில் பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில் காவலாளியாக பணியாற்றினார்.நேற்று பணி முடிந்து சைக்கிளில், ஈரோடு சாலை, சன்னியாசிப்பட்டியில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். இரவு, 7:00 மணிக்கு நாட்டாம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !