உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுகவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாக பூஜை

சுகவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாக பூஜை

சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் காலபைரவர் ஜென்மாஷ்டமி மகா யாக பூஜை நேற்று நடந்தது. அதையொட்டி காலபைரவ-ருக்கு பால், இளநீர், தயிர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்-வேறு வாசனை பொருட்களால் சிறப்பு அபிேஷகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பட்டாடையில் அருள்பாலித்தார்.தொடர்ந்து விநாயகர் பூஜை, பல்வேறு ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. சிவாச்சாரியார்கள், மூலிகைப்பொருட்களால் சிறப்பு யாகம் நடத்தினர். மேள, தாளம் முழங்க, மகா பூர்ணா-ஹூதி நடந்தது. கலச காலபைரவருக்கு மகா தீபாராதனை வழி-பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அனைவ-ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சேலம், உத்தமசோழ-புரம் கரபுரநாதர் கோவிலில் கால பைரவர் உற்சவர் திருமேனிக்கு சிறப்பு யாகபூஜை செய்து அதில் வைத்து பூஜித்த புனித நீர், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் பைரவருக்கு அபிேஷகம் செய்யப்பட்டது.பின் சர்வ அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் இளம்பிள்ளை பாலசுப்ரமண்யர் கோவிலில் கால சம்-ஹார பைரவருக்கு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை, வாசனை திரவியங்களால் அபி-ஷேகம் நடந்தது. தொடர்ந்து திருநீரு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்-தர்கள் தரிசித்தனர்.வாழப்பாடி அடுத்த, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. திர-ளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.இடைப்பாடி அருகே அரசிராமணி, குள்ளம்பட்டியில் உள்ள சோழீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தன. அதேபோல் சங்ககிரி, அன்னதானப்பட்டி பூத்தா-லக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் கோவிலில் உள்ள காலபை-ரவருக்கும் பூஜை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ