உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை: சுமுக தீர்வு ஏற்படாததால் ஒத்திவைப்பு

கோவில் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை: சுமுக தீர்வு ஏற்படாததால் ஒத்திவைப்பு

தலைவாசல்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, ஊனத்துார் கிராமத்தில் மணியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 2013ல், கோவிலில் திரு-விழா நடத்தப்பட்டது. அதன்பின், வழிபாடு தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை எழுந்ததால், திருவிழா நடத்தப்ப-டாமல் உள்ளது. கோவில் திருவிழா நடத்தும்படி ஒரு தரப்பி-னரும், மற்றொரு தரப்பினர் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர். இதுதொடர்பாக, நேற்று தலைவாசல் தாலுகா அலுவலகத்தில், ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரிய-தர்ஷினி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மற்றொரு நாளில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என, ஆர்.டி.ஓ., உத்தர-விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி