பைக் மோதி டீ மாஸ்டர் பலி
ஓமலுார், பைக் மோதிய விபத்தில், சிகிச்சையிலிருந்த டீ மாஸ்டர் உயிரிழந்தார்.ஓமலுார் வ.உ.சி., நகரை சேர்ந்தவர் ரமேஷ், 42, டீ மாஸ்டர். இவர் கடந்த, 4ல் அதிகாலை, 4:00 மணியளவில் ஓமலுார் தாலுகா அலுவலகம் எதிரே ரோட்டை கடக்க முயன்ற போது, அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து அதிவேகமாக வந்த ேஹாண்டா பைக் மோதியதில் ரமேஷ் காயமடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று ரமேஷ் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பைக் ஓட்டுனர் குறித்து, ஓமலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.