உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அருணாசலேஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா சுவாமிக்கு சாத்தப்பட்ட மஹா தீப மை

அருணாசலேஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா சுவாமிக்கு சாத்தப்பட்ட மஹா தீப மை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த, ஆருத்ரா தரிசன விழாவில், 'மஹா தீப மை' சுவாமிக்கு சாத்தப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்-தினம் இரவு, நடராஜர், சிவகாமசுந்தரி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்ம-னுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. அப்-போது திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, 'மஹா தீப மை' முதலில் நடராஜர் மற்றும் சிவகாமிசுந்தரி அம்மனுக்கு சாத்தப்-பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அண்-ணாமலையாருக்கு அரோகரா' கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து திருமஞ்சன கோபுர வாயில் வழியாக நடராஜர் மாட-வீதி உலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ