பிரச்னைக்கு காரணம் இது தான்!
வடுகத்தம்பட்டியில் உள்ள அன்புமணி தரப்பை சேர்ந்தவரின் பாக்கு உலர வைக்கும் களத்தில், அருள் தரப்பினர் கார் நிறுத்தியுள்ளனர். காரை, அங்கிருந்து வெளியேற்றும்படி கூறிய போது, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் உருவானது. இது, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாகவே, வழிமறித்து தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.