உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முல்லை நகர் சாய்பாபா கோவிலில் இன்று விஜயதசமி புண்ணிய திதி

முல்லை நகர் சாய்பாபா கோவிலில் இன்று விஜயதசமி புண்ணிய திதி

முல்லை நகர் சாய்பாபா கோவிலில்இன்று விஜயதசமி புண்ணிய திதிசேலம், அக். 12-சேலம், முல்லை நகர் ஷீரடி சாய்பாபா கோவிலில், இன்று விஜயதசமி புண்ணிய திதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.சேலம், சூரமங்கலம் முல்லை நகர் பகுதியில் உள்ள ஷீரடி சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலத்தில், விஜயதசமி புண்ணியதிதி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த, 5ல், கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏழு நாட்களுக்கு தொடர் நாமஸ்மரணம் நடத்தப்பட்டு வருகிறது.இன்று காலை, 8:00 மணிக்கு மகா அபி ேஷகம், 10:00 மணிக்கு பக்தி இன்னிசை, 12:00 மணிக்கு மத்யான ஆரத்தி, 1:00 மணிக்கு ஆத்ம ஜோதி சமர்ப்பணம், மாலை, 6:00 மணிக்கு துாப ஆரத்தி, இரவு, 7:00 மணிக்கு இசை நிகழ்ச்சி, 9:00 மணிக்கு இரவு ஆரத்தி ஆகியவை நடக்கின்றன. தொடர்ந்து நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ