நாளை மின் நுகர்வோர்
குறைதீர் வாழப்பாடி, சேலம் மாவட்டம், வாழப்பாடி மின் கோட்ட அலுவலகத்தில், நாளை, (18 ல்,) நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. சிங்கி புரம் துணை மின்நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கோட்ட அலுவலகத்தில், வட்ட மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில், காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே, கோட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என, கோட்ட செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.