மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது
03-Oct-2025
தலைவாசல்: தலைவாசல், தேவியாக்குறிச்சியில் உள்ள விவசாய தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்கும் வீடியோ நேற்று முன்தினம் பரவியது. இதுகுறித்து தலைவாசல் போலீசார் விசாரித்ததில், விவசாயி பொன்னுசாமி, 52, தோட்டத்தில் மதுபாட்டில் விற்றதும், அதன் விற்பனையில் ரஞ்சித்குமார், 32, ஈடுபட்டதும் தெரிந்தது. இதனால் இருவர் மீதும் நேற்று வழக்குப்பதிந்த போலீசார், அவர்களை தேடுகின்றனர்.2 மூதாட்டி கைதுகெங்கவல்லி போலீசார், நேற்று அதே பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்த, கடம்பூரை சேர்ந்த சின்னப்பிள்ளை, 65, ஆணையாம்பட்டி வசந்தி, 55, ஆகியோரை, போலீசார் கைது செய்து, 20 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
03-Oct-2025