4 நாட்கள் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படும்
சேலம், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வரும், 27, 28, 30, 31 ஆகிய நாட்களில், 'வைட்டமின் ஏ' திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:'வைட்டமின் ஏ' சத்து உடலுக்கு தேவையான இன்றியமையாத ஊட்டச்சத்து. இதனால் தேசிய அளவில், 6 மாதங்களுக்கு ஒருமுறை, 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, 'வைட்டமின் ஏ' திரவம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் வரும், 27 முதல், 31 வரை அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு, 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கும் முகாம் நடக்க உள்ளது.இதில் பொது சுகாதாரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறைகளை சேர்ந்த, 3,118 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். அவர்களை மேற்பார்வை செய்ய, 459 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அக்., 29 தவிர, 4 நாட்கள் நடக்கும் முகாம்களில், 2,47,031 குழந்தைகளுக்கு திரவம் இலவசமாக வழங்கப்படும். மக்கள், அவரவர் பகுதியில் உள்ள மையங்களுக்கு சென்று குழந்தைகளுக்கு திரவம் அளிக்க வேண்டும்.