நீர் மோர் பந்தல் திறப்பு
நீர் மோர் பந்தல் திறப்புசேலம்:பா.ஜ.,வின், சேலம் மாநகர அஸ்தம்பட்டி மண்டலம் சார்பில் வின்சென்ட் பகுதியில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. அதை, மாநகர தலைவர் சசிகுமார் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து மக்களுக்கு நீர் மோர் வழங்கினார். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அ.தி.மு.க.,ஆத்துார் நகர அ.தி.மு.க., சார்பில், தாலுகா அலுவலகம் எதிரே, தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. அதை திறந்து வைத்த, அ.தி.மு.க., மாவட்ட செயலர் இளங்கோவன், மோர், தர்பூசணி பழங்களை, மக்களுக்கு வழங்கினார். நகர செயலர் மோகன், மாநில வர்த்தக அணி துணை செயலர் வரதராஜன், மாநில இலக்கிய அணி துணை செயலர் காளிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.