உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.15 கோடியில் 733 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.15 கோடியில் 733 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

சேலம், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சேலம் அடுத்த நெய்க்காரப்பட்டியில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் முன்னிலை வகித்தார்.அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில், ''உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, 676 பேருக்கு வீட்டுமனைப்பட்டா, 27 பேருக்கு பட்டா மாறுதல் ஆணையம், 30 பேருக்கு தையல் இயந்திரம் என, 733 பயனாளிகளுக்கு, 15.65 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில், நெசவாளர்கள் நலன் காக்க, 880 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா தொடங்கப்பட்டுள்ளது,'' என்றார்.டி.ஆர்.ஓ., ரவிக்குமார், ஆர்.டி.ஒ., உதயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ