உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின்சாரம் பாய்ந்து தொழிலாளி அட்மிட்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி அட்மிட்

சேலம், சேலம், அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் துரை, 40. பந்தல் தொழிலாளியான இவர், சதுர்த்தியை ஒட்டி அமானி கொண்டலாம்பட்டி கிழக்கு வட்டத்தில் அமைத்த பந்தலின் மேற்கூரையை நேற்று பிரிக்க முயன்ற போது, அருகே இருந்த மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அவரை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி