உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பட்டதாரி பெண்ணை கரம்பிடித்த தொழிலாளி

பட்டதாரி பெண்ணை கரம்பிடித்த தொழிலாளி

தாரமங்கலம்: தாரமங்கலம், தச்சங்காட்டூரை சேர்ந்த தறித்தொழிலாளி அருண்-குமார், 26. பனஞ்சாரியை சேர்ந்தவர் ரம்யா, 23. பி.எஸ்சி., மைக்-ரோபயாலஜி முடித்துள்ளார். இருவரும் காதலித்த நிலையில், ரம்-யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி கடந்த, 28ல் வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்-தினம் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து நேற்று, பாது-காப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இரு-வரது பெற்றோரை வரவழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர். ரம்-யாவின் பெற்றோர் ஏற்காதததால், காதலனுடன் அவரை, போலீசார் அனுப்பிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !