காளிப்பட்டி கந்தசாமி உள்ளிட்ட முருகன் கோவில்களில் பூஜை
வீரபாண்டி: தை மாத வளர்பிறை சஷ்டியான நேற்று, சேலம்-நாமக்கல் எல்-லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு கோ பூஜையுடன் கந்த-சாமி விஸ்வரூப தரிசனம் அளித்தார்.மூலவர் கந்தசாமிக்கு, 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிேஷகம் செய்து, முத்தங்கி அணிவித்து ராஜ அலங்கா-ரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. உற்சவர் கந்தசாமி தன் அண்ணன் விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சஷ்டியில் கந்தசாமியை தரிசிக்க சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட சுற்று-வட்டாரங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்-துடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து, சஷ்டி விரதத்தை துவக்கினர்.இதே போல் வளர்பிறை சஷ்டியையொட்டி, சேலம் ஆட்டை-யாம்பட்டி வேலநத்தம் பாவடியில் உள்ள முத்துக்குமாரசுவாமி கோவில், வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமண்யர் கோவில்களில் நடந்த பூஜைகளில் திரளான பக்தர்கள் முருகப்பெ-ருமானை தரிசித்தனர்.* சங்ககிரி, சவுந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானையுடன் முருகன், கோவிலை சுற்றி வலம் வந்தார். கட்டளைதாரர்கள், முருக பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.* தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில் நேற்று காலை நந்தி மண்டபம் முன், தேரில் எழுந்தருளிய சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி, வரதராஜ பெருமாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பூஜை செய்தனர். தைப்பூச தேர்த்திருவிழாவையொட்டி, நேற்று கொடியேற்றம் நடந்தது. இரவு: 7:00 மணிக்கு மேல் சோமாஸ்கந்தர், உமாமகேஸ்-வரி சுவாமி சிறப்பு அலங்காரத்தில், சேஷ வாகனத்தில் கோவிலில் எழுந்தருள செய்தனர். அங்கிருந்து முக்கிய வீதிகள்வழியாக திருவீதி உலா நடந்தது.