உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் 8574 டன் உரம்

சிவகங்கையில் 8574 டன் உரம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க 8,574 டன் உரம் கையிருப்பில் உள்ளதாக, வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி பிரபா தெரிவித்தார்.சிவகங்கை அருகே கொல்லங்குடி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில், 60 விவசாயிகளுக்கு டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அவர் கூறியதாவது: மாவட்டத்தில் தற்போது பெய்துள்ள மழையை நம்பி விவசாயம் செய்வதற்கு ஏற்ப, யூரியா 4774, டி.ஏ.பி., 1,001, பொட்டாஷ் 532, காம்ப்ளக்ஸ் 2,267 டன் உரம் இருப்பில் உள்ளது.விவசாயிகள் அரசு நிர்ணயித்த விலையில் உரத்தை பெற்று பயன்பெறலாம், என்றார். வேளாண்மை உதவி இயக்குனர் பரமேஸ்வரன், கொல்லங்குடி கூட்டுறவு கடன் சங்க செயலர் காளீஸ்வரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை