உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 90 வயதான நெற்குப்பை பேரூராட்சி ; பத்திரப்பதிவு, சந்தை பஸ் ஸ்டாண்ட் வருமா

90 வயதான நெற்குப்பை பேரூராட்சி ; பத்திரப்பதிவு, சந்தை பஸ் ஸ்டாண்ட் வருமா

நெற்குப்பை : நெற்குப்பை பேரூராட்சி மக்களின் தேவை கருதியும், வருவாய் அதிகரிப்பிற்கும் கூடுதல் வசதி கேட்டு பேரூராட்சியில் கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். 90 ஆண்டு பழமையான பேரூராட்சியின் வளர்ச்சியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற மக்களின் எதிர்பார்ப்பை பிரதிபலித்தது.திருப்புத்துார் ஒன்றியத்தில் உள்ளது நெற்குப்பை பேரூராட்சி. நெற்குப்பை நகர் மற்றும் பரியாமருதிப்பட்டி, வடுகபட்டி, கிளாமடம், புரந்தன்பட்டி, நீலமேகப்பட்டி, பள்ளத்துப்பட்டி ஆகிய குடியிருப்பு பகுதி இணைந்து 1944 ல் நெற்குப்பை பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டது. தற்போது 90 ஆண்டுகளாகியும் போதிய வருவாய் இன்றி நகருக்கான வசதியையும் முழுமையாக பெறாத நிலையே நிலவுகிறது. பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை, பூங்கா, கல்லுாரி கிடையாது. மருத்துவத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது.

பஸ் ஸ்டாண்ட் இல்லாத பேரூராட்சி

நெற்குப்பை நகரைச் சுற்றிலும் 30 கிராம மக்கள் வசிக்கின்றனர். நெற்குப்பையில் அடிப்படை வசதிகள் அதிகரித்தால், அரசு அலுவலகங்கள் துவக்கப்பட்டால் சுற்றுப்புறக் கிராமத்தினருக்கும் அதன் பலன் சேரும். நெற்குப்பையில் நீண்டகாலமாக பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரி வருகின்றனர்.திருப்புத்துார்--பொன்ன மராவதி ரோட்டில் நெற்குப்பை நகர் அமைந்துள்ளது. இங்கிருந்து வேந்தன்பட்டி,பொன்னமராவதி,திருப்புத்துார், மகிபாலன்பட்டி,துவார் ஊர்களுக்கு நேரடி போக்குவரத்து வசதி உள்ளது. ஆனால் பஸ்கள் வந்து செல்ல பொருத்தமான இடத்தில் பஸ் ஸ்டாண்ட் இல்லை. இதனால் பயணிகள் காத்திருக்கவும், பஸ்கள் இங்கிருந்து இயங்கவும் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.

பத்திரப்பதிவுக்கு அலைச்சல்

சுற்றிலும் கிராமத்தினர் தோட்ட விவசாயிகளாக உள்ளனர். நெற்குப்பையில் உழவர் சந்தை துவக்கினால் நகர் மக்களுக்கும் நியாயமான விலையில் காய்கறிகள் கிடைப்பதுடன், விவசாயிகளும் பலனடைவர். நெற்குப்பை மற்றும் சுற்றுப்புற 30 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பத்திரப்பதிவு அலுவலக நடைமுறைகளுக்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு சென்று வருகின்றனர். பத்திரப்பதிவிற்கான வருவாய் சான்றிதழ் அனைத்திற்கும் திருப்புத்துார் வந்து செல்ல வேண்டியுள்ளதால் கால விரயத்துடன் பணமும் விரயமாவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.வெளி மாவட்டம் என்பதால் காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால் பத்திரப்பதிவு, திருமண பதிவு,பிறந்தநாள்,இறந்தநாள் சான்றிதழ் பணி காலதாமதமாக நடைபெறுகிறது என்கின்றனர். நெற்குப்பையில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் துவக்கக் கோரியுள்ளனர்.

மருத்துவமனை தரம் உயர்த்தல்

மருத்துவ வசதிக்கு நெற்குப்பை ஆரம்பசுகாதார நிலையத்தில் போதிய படுக்கை வசதி இல்லை. சிகிச்சைக்கு பொன்னமராவதி அல்லது 20 கி.மீ. தொலைவிலுள்ள திருப்புத்துாருக்கு செல்ல வேண்டியுள்ளது .சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த இப்பகுதியினர் கோரியுள்ளனர்.- பழனியப்பன்பேரூராட்சி தலைவர்

நேரடியாக வலியுறுத்துவோம்

நெற்குப்பையில் வருவாய் அதிகரிப்பிற்கு கூடுதல் வசதி ஏற்படுத்த அரசை கோரியுள்ளோம். சார்பதிவாளர் அலுவலகம் ஏற்படுத்தவும், வணிக வளாகத்துடன் பஸ் ஸ்டாண்ட், கூடுதல் படுக்கை வசதியுடன் அரசு மருத்துவமனை, உழவர் சந்தை போன்றவை கோரி தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம். நேரடியாக சென்றும் வலியுறுத்த உள்ளோம்.

நேரடியாக வலியுறுத்துவோம்

நெற்குப்பையில் வருவாய் அதிகரிப்பிற்கு கூடுதல் வசதி ஏற்படுத்த அரசை கோரியுள்ளோம். சார்பதிவாளர் அலுவலகம் ஏற்படுத்தவும், வணிக வளாகத்துடன் பஸ் ஸ்டாண்ட், கூடுதல் படுக்கை வசதியுடன் அரசு மருத்துவமனை, உழவர் சந்தை போன்றவை கோரி தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம். நேரடியாக சென்றும் வலியுறுத்த உள்ளோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை