உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மேலப்பிடாவூர் கோயிலில் செப்.8ல் கும்பாபிேஷகம்

மேலப்பிடாவூர் கோயிலில் செப்.8ல் கும்பாபிேஷகம்

மானாமதுரை : மேலப்பிடாவூர் எல்லாரப்பன்(எ)முத்தையா அய்யனார் கோயிலில் செப்., 8ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.செப்., 6ம் தேதி காலை 6:00 மணி முதல் கணபதி ஹோமத்துடன் விக்னேஸ்வர பூஜை,தீபாராதனை மற்றும் முதலாம் கால பூஜை ஆரம்பமாகி 7ம் தேதி விசேஷ சாந்தி மற்றும் 2 மற்றும் 3ம் கால யாக சாலை பூஜைகள்,நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜை நடைபெற உள்ளது. செப்., 8ம் தேதி காலை 5:00 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் 4ம் கால யாகசாலை பூஜை ஆரம்பமாகி லட்சுமி, கோ பூஜை, உள்ளிட்ட பல்வேறு வகையான பூஜை முடிந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று காலை 7:00 மணி முதல் 8:30 மணிக்குள் கோபுர கலசங்களில் நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க உள்ளனர்.ஏற்பாடுகளை மேலப்பிடாவூர்,குலக்கட்டப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டு மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி