உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சட்ட விழிப்புணர்வு

சட்ட விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் அரசு மகளிர் கல்லுாரியில் நடந்தது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி பரமேஸ்வரி தலைமை வகித்தார். சென்னை இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் வழக்கறிஞர்கள் ரோசன்ராஜன், ராஜா பயிற்சி அளித்தனர். நீதிபதிகள் அனிதா கிறிஸ்டி, அபர்ணா, ஜெயபாரதி, நீதிமன்ற பணியாளர்கள், மாவட்ட தனிக்குழு உறுப்பினர்கள், சட்டம் சார் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.புலம்பெயர் தொழிலாளர்கள், குழந்தை தொழிலாளர்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முத்து கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி