மருத்துவக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2024--25ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. இந்த ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இந்த மருத்துவக் கல்லுாரியில் 7 சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 6 பேர் சேர்ந்துள்ளனர். அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 பேருக்கு இதுவரை 4 பேர் சேர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளி ஒருவரும் சேர்ந்துள்ளார்.