குறைதீர் கூட்டம்
சிவகங்கை: சிவகங்கையில் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 429 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். முகாமில் 6 பயனாளிகளுக்கு ரூ.2.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.