மேலநெட்டூர் கோயிலில் ஆனித்திருவிழா துவக்கம்
மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மேலநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர் சாந்தநாயகி அம்மன் கோயிலில்ஆனித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனை, பூஜை நடைபெற்றது. திருக்கல்யாணம் ஜூலை 7ம் தேதி, 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானீகர் செல்லப்பா குருக்கள் மற்றும் மேலநெட்டூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.