உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சமூக பணி உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம்

சமூக பணி உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம்

சிவகங்கை : இளைஞர் நீதி குழுமத்தின் சமூகப் பணி உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக சிவகங்கை கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: இம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்தில் சமூகப்பணி உறுப்பினர்களை நியமிக்க தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. அரசு மதிப்பூதிய அடிப்படையில் ஒரு பெண் உட்பட 2 சமூகப்பணி உறுப்பினர் நியமிக்கப் படுவர். இக்குழு குழந்தைகள் சார்ந்த உடல்நலம், கல்வி அல்லது நலப்பணியில் குறைந்தது 7 ஆண்டு ஈடுபட்டிருக்க வேண்டும். அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று, தொழில் புரிபவராகவோ இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதிற்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடமோ அல்லது https://dsdcpimms.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செப்.,15 அன்று மாலை 5:00 மணிக்குள் இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம், சென்னை -- 600 010 என்ற முகவரியில் கிடைக்கும் படி அனுப்ப வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !