மாணவர்களுக்கு பாராட்டு
தேவகோட்டை: தானாவயல் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் வட்ட, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்று மூன்று பேர் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றனர். கரூரில் நடைபெற்ற மாநில போட்டியில் 1, 2 ஆம் வகுப்பு பிரிவில் மாறுவேடப் போட்டியில் தரணிதரன் முதல்பரிசும், தனி நடிப்பு போட்டியில் மாணவி வர்னிஷா இரண்டாம் பரிசும் பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் மெர்சி, ஆசிரியர் ஜான் பீட்டர், மேலாண்மை குழுவினர், பெற்றோர்கள் பாராட்டினர்.