உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாண்டுரங்கன் கோயிலில்  ஜூலை 5, 6ல் ஆஷாட ஏகாதசி  

பாண்டுரங்கன் கோயிலில்  ஜூலை 5, 6ல் ஆஷாட ஏகாதசி  

சிவகங்கை : சிவகங்கை ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் ஆஷாட ஏகாதசி திருவிழா ஜூலை 5 மற்றும் 6ம் தேதியில் நடைபெறுகிறது.சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயில் அருகே உள்ள ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு ஜூலை 5ம் தேதி காலை 8:00 மணிக்கு மங்கள விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், பாண்டுரங்கன் உற்ஸவ மூர்த்தி திருவடி தரிசனம், மாலை பஜனை நடைபெறும். ஜூலை 6ம் தேதி காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை, அர்ச்சனை நடைபெறும். மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு தேரோடும் வீதிகளில் ரகுமாயி சமேத பாண்டுரங்கன் உற்ஸவ மூர்த்தி புறப்பாடு நடைபெறும். விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை