பாண்டுரங்கன் கோயிலில் ஜூலை 5, 6ல் ஆஷாட ஏகாதசி
சிவகங்கை : சிவகங்கை ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் ஆஷாட ஏகாதசி திருவிழா ஜூலை 5 மற்றும் 6ம் தேதியில் நடைபெறுகிறது.சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயில் அருகே உள்ள ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு ஜூலை 5ம் தேதி காலை 8:00 மணிக்கு மங்கள விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், பாண்டுரங்கன் உற்ஸவ மூர்த்தி திருவடி தரிசனம், மாலை பஜனை நடைபெறும். ஜூலை 6ம் தேதி காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை, அர்ச்சனை நடைபெறும். மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு தேரோடும் வீதிகளில் ரகுமாயி சமேத பாண்டுரங்கன் உற்ஸவ மூர்த்தி புறப்பாடு நடைபெறும். விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.