மாணவர்களுக்கு விருது
சிவகங்கை: திண்டுக்கல் மாவட்டம் பசுமை வாசல் பவுண்டேஷன் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மரக்கன்றுகள் நடும் விழாவில் சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் 17 பேருக்கு நிறுவனர் கோகுல்நாத், தலைமை ஒருங்கிணைப்பாளர் சண்முக வடிவேல் பசுமை விதைச்செம்மல் விருது வழங்கினர். விருது பெற்ற மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் பாலாமணி, பள்ளிச் செயலாளர் நடேசன், தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.