விழிப்புணர்வு கூட்டம்
பூவந்தி: திருமாஞ்சோலை பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் காவல்துறை சார்பில் போதை பழக்கத்தின் தீமை, சாலை பாதுகாப்பு உள்ளிட்டவை பற்றி சிறப்பு எஸ்.ஐ.,க்கள் பிரேம லதா, வளர்மதி அறிவழகன் எடுத்துரைத்தனர்.கூட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் தீண்டாமை எதிர்ப்பு உறுதி மொழி எடுத்து கொண்டனர். கூட்டத்தில் முதல்வர் ரவீந்திரன், பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.