நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் பலி
காரைக்குடி: சாக்கோட்டை அருகேயுள்ள பிரம்பவயலைச் சேர்ந்தவர் ராசு 50. இவருக்கு மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இவர் கண்டனுாரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், இரவு பைக்கில் வேலைக்கு சென்ற போது காட்டு குறிச்சி அம்பாள் நகர் அருகே நாய் குறுக்கே வந்தது. இதில் நிலை தடுமாறி ராசு கீழே விழுந்து காயம் அடைந்தவர் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.