காரைக்குடியில் புத்தகக் கண்காட்சி
காரைக்குடி: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் ஸ்கோலாஸ்டிக் புத்தக நிறுவனம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. அக். 9 ல் தொடங்கிய கண்காட்சி இன்றுடன் முடிவடைகிறது. கண்காட்சியை பள்ளி சேர்மன் குமரேசன் தொடங்கி வைத்தார். மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு தேவையான புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. பள்ளி முதல்வர் உஷா குமாரி, மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.