கோவிலுாரில் மாட்டுவண்டி பந்தயம் பார்வையாளர்களுக்குள் புகுந்த வண்டி
காரைக்குடி: காரைக்குடி அருகே கோவிலுாரில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.பெரிய மாடு சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக போட்டி நடந்தது. போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 39 ஜோடி மாடுகள் பங்கேற்றன. போட்டியின் போது, வேடிக்கை பார்த்த பார்வையாளர்களுக்குள் மாடுகள் புகுந்ததால் மாட்டு வண்டி கவிழ்ந்தது. பார்வையாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.