உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை: நாட்டரசன்கோட்டையில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது. பெரிய மாடு பிரிவில் 9 மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 23 மாட்டு வண்டிகளும் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து பங்கேற்றனர். பெரிய மாட்டுக்கு 8 கிலோமீட்டர் துாரமும், சிறிய மாட்டிற்கு 6 கிலோமீட்டர் துாரமும் பந்தய துாரமாக நிர்ணயிக்கப்பட்டது. சிவகங்கை தொண்டி சாலையில் நடந்த இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளருக்கும் அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை