மகன் மீது வழக்கு: தாய் தர்ணா
சிவகங்கை : சிவகங்கை அருகே வாணியங்குடியை சேர்ந்தவர் சேதுபதி. இவரது மனைவி செல்வி 45. நேற்று காலை 11:30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்த அவர், ரோட்டில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். சிவகங்கை மாவட்ட போலீசார், தன் மகன் குட்டை சங்கர் (30) மீது பொய்யாக கஞ்சா விற்பது, கொலை வழக்கு பதிவு செய்து அவனை தொந்தரவு செய்வதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன் தரையில் படுத்து தர்ணாவில் ஈடு பட்டார். அவரை எஸ்.ஐ.,க்கள் செல்வராஜ், அமுதா மீட்டனர். பின்னர் கலெக்டர் பொற்கொடியிடம் மனு அளித்து சென்றார்.